Saturday, March 12, 2011

அப்பாலுக்கு அப்பால்......


இருண்டுகிடக்கும்

நாற்சுவர்களுக்கு நடுவில்

நான் புதைந்துகிடக்க விரும்பவில்லை.

எதையும் வெறும் அப்பாலுடன்

என்னால் நிறுத்த முடியவில்லை.

அதன்

அப்பாலுக்கு அப்பாலும்

பரந்து விரிந்து,

எல்லைகளற்ற எல்லைகளால்

நான் சூழப்பட முயற்சிக்கின்றேன்.

எல்லாவற்றையும் எதற்குள்ளாவது

அடக்கி வைப்பதில் நீங்கள் வெற்றி கண்டுவிட்டீர்கள்.

எல்லாவற்றையும் வெறும்

அப்பாலுடன் நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்.

அதற்கு அப்பாலும் அது செல்லட்டும்.

காரணம் கொண்டு மகிழாதீர்கள்,

அது நிரந்தரமற்றது, உண்மையற்றது.

காரணங்களின் முடிவில்

உங்களுக்கான துன்பம்

கடைவிரித்து காத்திருக்கும்.

எதற்காகவும் மகிழுங்கள்,

நீங்கள்

இருப்பதற்காக(exist),

நிற்பதற்காக,

மூச்சுவிடுவதற்காகவும் மகிழுங்கள்,

சிரிப்பதற்காக சிரியுங்க்கள்,

பாடுவதற்காக பாடுங்கள்.

அது நிரந்தரமானது, உண்மையானது.

அந்த மகிழ்ச்சி

அப்பாலுக்கு அப்பாலும் பரந்து செல்லும்.

அதற்கு தடைகள் இல்லை,

சுவர்கள் இல்லை.

இயற்கையான எதையும்

அதன் போக்கில் விட்டுவிடுங்கள்.

அதன் திசையை

மாற்றுவதற்கான உங்கள் முயற்சி

உங்களிடம் இருக்கும் - எல்லாவற்றையும்

இழக்க செய்துவிடும்.

இயற்கையின்

அசைவுகள் எல்லாம் அழகிய நடனங்களே.

அவை

நடனங்களுக்காகவே ஆடப்படும் நடனங்கள்.

அது

அப்பாலுக்கு அப்பாலும் தொடர்ந்து செல்லும்.


பெண்களை

நிர்வாணமாக்குவது பற்றி அவனும்,

ஆண்களை

உள்வாங்குவது பற்றி அவளும்

சதா சிந்தனையில் துவளுகின்றார்கள்.

அது ஆணவத்தின் வழி.

உங்களை

வெறும் அப்பாலுடன்

அடக்கிவைத்ததன் வெளிப்பாடு.

ஆணவம்

எதையாவது அபகரித்துக்கொள்வதில்,

தன்னுடமையாக்கிக்கொள்வதில்

மகிழ்ச்சிகாணும்.

அன்பு

பங்கிடுவதில்,

தன்னிடமுள்ளதை இழந்துவிடுவதில்

மகிழ்ச்சிகாணும்.

அன்பு அப்பாலுக்கு அப்பாலும் செல்வது.

ஒளியப்ப் போல,

தென்றலைப் போல

பரந்து விரிந்து செல்வது.

அன்பில்

"அடுத்தவன்" என்பது செயலிழந்துவிடும்.

ஏனெனில், அன்பு

"நான்" என்ற "தன்" முனைப்பையே அறியாதது.

அதனால்,

அங்கு "அடுத்தவனும்" இல்லை.

அங்கு இருமைகள் இல்லை.

எல்லாம்

"அப்பாலுக்கு அப்பால்" செல்லும் ஒருமை தான்.

- அப்பாலுக்கு அப்பால் எப்பொழுதும் நிற்பவன்.

Friday, March 11, 2011

இரவுகளுக்கு விடை கொடுத்து விட்டேன்.....

என் இரவுகள் சிந்தனைகளின்

அலைகடலில் சிக்குண்டு விட்டது,

எந்த நங்கையராலும்

அந்த இரவுகள் களவாடப்படவில்லை,

அதனை எனக்குள் நானே களவாடி விட்டேன்.

இயற்பியல் விதிகளிலும்

வலுவுள்ளவை பரிணாமக் கொள்கைகள்,

அது எதனையும் விளக்கிவிடும்,

ஐன்ஸ்டீன் டார்வினிடம் எப்பொழுதோ தோற்றுவிட்டார்..........

என் மனக்கடல் அலைகள்

நுரை நுரையாய் எதையோ கரை சேர்க்கின்றது,

எதையோ நோக்கி விரைவாக நகருகின்றேன்.

அது எது என்று தெரியவில்லை.

எதையாவது விளையாடுவதிலும்

எதையாவது பற்றி சிந்திப்பது

விருபத்திற்குரியதாகிவிட்டது.

எதையாவது பார்ப்பதிலும் எதையாவது வாசிப்பது

விருப்பத்திற்குரியதாகிவிட்டது.

பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் என்னவென்பது பற்றியதாகவும்,

இயற்கைத் தேர்வின் வலு இழப்பு பற்றியதாகவும்

அந்த நுரைகள் இருக்கலாம்.........................

இருபத்து மூன்று வருட வாழ்வியலில்,

நான் அறிந்ததை

மிர்தாத் வெறும் 287 பக்கங்களில் சொல்லிவிட்டார்.

அவளுக்கும், அவர்களுக்கும்

நான் அடக்கி திருப்திப் படுத்திவிட முடியாதவனாக இருக்கலாம்.

காமுகர்கள் அப்பிடித்தான்.

மார்க்சியவாதத்தின் மீது

எனக்கு அடங்காத பற்று உண்டானதும்

அதனாலாக இருக்கலாம்.................

அவர்களுடன், எனக்கு இப்பொழுது

தீவிரமாக ஒட்டவில்லை.

அவர்களின்

சிரிப்பு, அழுகை, காதல், பிரிவு, சேர்வு

எல்லாம் நகைப்புக்கிடமாகிவிட்டது.

எல்லாம் பிரபஞ்ச இயக்கத்தில் வேடிக்கையானது..........................

அவர்கள் கூத்தாடும் பொழுதும்,

மகிழ்ச்சிக்குரிய விடயங்களாக சொல்லப்படுபவற்றில்

மூழ்கியிருக்கும் பொழுதும்,

நான்

அமைதியாக எங்கோ ஒரு மூலையில்,

எனக்குள் என்னை செலுத்துகின்றேன்.

அலைகடலென ஆர்ப்பரிக்கும் என்னை

எதுவும் கட்டிப் போட்டுவிடாது.

என் இரவுகளையும்

அந்த அலைகடலில் தொலைத்துவிட்டேன்.....................

-அடையாளம் தொலைந்து போனவன்.

நீ, நான், அது பற்றி....................

எனது கருத்துக்கள்,

மற்றவர்களிடம் இருந்து

என்னை மிக அந்நியமாக்கிவிடும்.

என்னைப் போலவே,

அந்நியமாகிப் போனவர்கள்

எனக்கு அந்நியோன்யம் ஆகிப்போவார்கள்.

அப்படி அந்நியோன்யம் ஆகிப் போனவர்கள்

என்னுடன்

சித்தாந்ததிலும், கோட்பாடுகளிலும்

என்றும் பிளவு பாடாத உயிர்த் தோழர்களாகிவிடுவார்கள்.

ஏன் ....?

உண்மையின் முழு உண்மையானதையும்,

பொய்யின் முழு நிர்வாணத்தையும்

அவர்களும் என்னைப் போலவே அறிந்ததனால்.

விழிப்புணர்வும், புரிதலும் தான்

எனது சிதந்தம்.

நாளையைப் பற்றிய கேள்விகள்

இன்று மிக அர்த்தமற்றவை.

இன்று, இப்பொழுது, இங்கே,

இது மட்டும் தான் உண்மை.

நாளைய பொழுதுகளுக்காய்

இன்றைய பொழுதுகளை

செதுக்கிக் கொண்டிருப்பதாய் அவர்கள் சொல்லுகின்றார்கள்.

அது முற்றிலும் போலியானது...................

ஏனெனில்,

நாளைய பொழுதுகளும்

இன்றைய பொழுதுகள் போலவே

உன்னைக் கடந்து போகும்.

இன்றைப் போலவே

நாளைய பொழுதுகளையும்

நீ நாளண்டைய பொழுதுகளுக்காய்

செதுக்கி செலவளித்துவிடுவாய்.

இவ்வாறே உனது வாழ்க்கை

செதுக்கி செலவழிப்பதிலையே முடிந்துவிடுகிறது.

எதையும் செதுக்கி விடாதே

அது சிலையாகத் தான் இருக்கின்றது.

நீ தான் அதை கண்டுகொள்ளவில்லை.

கடவுளாகிய இயற்கை,

இயற்கையாகிய கடவுள்,

மனிதனாகிய கடவுள்,

கடவுளாகிய மனிதன்

எதையுமே நீ கண்டுகொள்ளவில்லை.

காதலையும் காமத்தையும் கூட

நீ காணவில்லை.

ஏனெனில்,

உன் பொழுது செதுக்கிய சிற்பதை செதுக்குவதிலையே

முடிந்து விடுகின்றது.

ஒரு விபச்சரியைய் விட,

நீ கடவுளுக்கருகில்

ஒரு பொழுதும் இருக்க முடியாது.

நீ எப்பொழுதும் காமத்தைப் பற்றியும்,

மற்றவர்களுடன் புணர்வதைப் பற்றியும்

சிந்திக்கும் பொழுது,

ஒரு விபச்சாரி

கடவுளைப் பற்றியே சிந்திக்கின்றாள்.

நீ பெண்களுக்காய்

கோவில் செல்லும் பொழுது,

அவள் தன் படுக்கயறையில் கடவுளை தரிசிக்கின்றாள்.

உன்னை நீ பெரியளவில் மாற்று,

மிகப்பெரிய விழிப்புணர்வுக்கு உள்ளாகு

என்னைப் புரிந்துகொள்.

மற்றவர்களுக்கெல்லாம் நீ

அந்நியனாகி,

என்

அந்நியோன்யனாகிவிடலாம்.

-உங்கள் அந்நியன்,

அமரசேகரம் திவாகர்.